Saturday, 16 February 2013
மாசி மகம் வருகிற பிப்ரவரி 25 திங்கட் கிழமை வருகிறது.
போன மாசம் தை பூசம் நிகழந்தது இப்போது மாசி மகம்
இவைகளை வெறும் சம்பிரதாயமான ஆலய வழிபாடு என்று கருதிவிடாமல், அர்த்தமும், அறிவும்,ஆற்றலும் ஆன்மீகமும், இணைந்த அற்புதமான தத்துவத்தின் வெளிப்பாடு, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சூரியனும் சந்திரனும் அதிக அளவிலான ஆற்றலைக் வெளிப் படுத்தும் சமயங்களில் தான், முக்கிய சிறப்பு ஆலய வழிபாடுகள் நடத்தும் படியாக ஆகம விதிகள் அமைந்துள்ளன. அவற்றிற்கு வானியல் நிகழ்வுகளும் ஆதாரமாக துணை புரிகின்றன.
சூரியன் சிவ நாராயணன் வடிவம்
சந்திரன் சக்தி சொருபம்
சூரியன் ஆற்றலின் பெருக்கு
சந்திரன் எண்ணங்களின் எழுச்சி
சூரியன் ஆண்மை
சந்திரன் பெண்மை
சூரியன் தந்தை பித்ருகாரகன்
சந்திரன் பெண்மை மாத்ருகாரகன்
இந்த சூரியனும் சந்திரனும் வான வெளியில் உள்ள ரசி மண்டலத்தில் ஒவ்வொரு மாதமும் நேருக்கு நேராக வரும் பொது தான் பவுர்ணமி நிகழ்கிறது.
மாசி மகத்தில் சூரிய சந்திரன் இரண்டும்
`ஒளித் தொடர்பு கொள்ளும் பவுர்ணமி`
நாளில் தான் மாசி மகம் நிகழ்கிறது
சிவ அம்சமாக உள்ள சூரியணனின் ஒளிக் கதிர்களை, சக்தி அம்சமாக உள்ள சந்திரன் பெற்று மகிமை பெரும் நாளே மாசி மகம்.
இதனாலேயே சிவ சக்தி வழிபாடுகளும் மகத்துவம் பெறுகிறது
கும்பகோணம் எனப்படும் குடந்தையில், கும்பேசுவரர் ஆலய புண்ணிய தீர்த்ததில் நீராடுதல் உலகப் பிரசித்தம் ஆனதாகும்.
ஊழிக் காலத்தில் உலகம் முழுதும் அழிந்து உயிர்கள் ஒரு குடத்து நீரில் ஒடுக்கப் பட்டதாகவும், மீண்டும் புது யுகம் இந்த மாசி மக நாளில் தான் இறைவனால் அக் குடத்தில் இருந்து உயிர்கள் விடுவிக்கப் பட்டதாகவும்,
அக் குடத்தில் இருந்து தான் புத்துலகம் படைக்கப் பட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
உயிர்களின் உருவகமான அந்த தெய்வீக குடத்து நீரின் அம்சம் குடந்தை மகாமக குளத்து நீரில் கலந்திருப் பதாக ஐதீகம்.
குடத்தில் உயிர்களை ஒடுக்கி மீண்டும் புத்திப்பித்து புத்துலகம் படைத்த நாளே மாசி மகம்.
இயற்க்கை சக்தியாக வெளிப்படும் தெய்வ அனுக் கிரகங்களை, ஏற்புடைய உகந்த காலங்களில், மானிடர்களின் உடலும் உள்ளமும், இயல்பாக இசைவு கொண்டு ஏற்கின்றன.
இயற்கையின் அருளாகிய சிறப்பு ஆற்றல்கள், நமக்குள் உட் புகுந்து இயங்கி, உன்னதம் தருவதாக அமைந்துள்ளது மாசி மகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment